
ஈரோட்டைச் சேர்ந்த எஸ்கேஎம் எக் புராடக்ட்ஸ் என்ற நிறுவனம் முழுவதும் இயற்கை உணவுகளைத் தீவனமாகக் கொண்ட கோழிகள் மூலம் பெறப்படும் சைவ முட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன மேலாளர் ஹரிஹரன் கூறும்போது 8 வாரத்துக்கு உட்பட்ட கோழிக் குஞ்சுகளை தனியாக பண்ணையில் பராமரிக்கிறோம்.
அவற்றின் குஞ்சு பொரிக்கும் காலமான 72வது வாரம் வரை சோயாபீன்ஸ் உட்பட இயற்கை உணவுகளால் தயாரிக்கப்பட்ட பவுடர் தீவனமாக அளிக்கப்படுகிறது.
அவற்றைத் தின்று வளரும் கோழிகள் இடும் முட்டை 100 சதவீத சைவமாகவே கருதப்படும்.ஏனெனில் வைக்கோல், புல், பிண்ணாக்கு உள்பட இயற்கை தீவனத்தைச் சாப்பிடும் பசுக்கள் தரும் பாலை சைவமாகக் கருதுகிறோம்.
எனவே இயற்கை தீவனம் தின்று வளரும் கோழிகளின் முட்டையையும் அப்படியேக் கருதப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
Monday, 24 December 2007
சைவ முட்டை
Posted by tksora at 9:07 am
Labels: அறிதல் நன்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment