டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து தகவல் தொழில் நுட்ப துறையினர் நன்கு அறிவார்கள். இந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, இந்தியா மற்றும் அமெரிக்காவில் பணியாற்றும் மென்பொருள் வல்லுநர்களின் ஊதியத்தில் நிலவிய வேறுபாட்டை கணிசமாக குறைத்து வருகிறது.
இந்த வேறுபாடு கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்ததைவிட 21 விழுக்காடு தற்போது குறைந்துள்ளது. போட்டி சூழ்நிலை நிலவும் இந்நேரத்தில் குறைந்த ஊதியத்திற்கு தகவல் தொழில் நுட்பத்துறைக்கு வல்லுநர்கள் கிடைப்பது இந்தியாவில் தான் என்ற நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. ஊதிய விகிதம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வின் வெள்ளை அறிக்கையில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவில் பணியாற்றும் தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கும், அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்கும் இடையேயான ஊதிய விகித வேறுபாடு 86 விழுக்காடாக இருந்தது. இது கடந்த ஆண்டு 82 விழுக்காடாகவும் தற்போது, 78 விழுக்காடாகவும் குறைந்துள்ளது.
அதிகாரிகள் மட்டத்திலான ஊதிய வேறுபாடு கடந்த 2006ஆம் ஆண்டு 68 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு 60 விழுக்காடாக குறைந்ததோடு தற்போது, ஆண்டுக்கு 52 விழுக்காடு என்ற அளவில் இந்த ஆண்டு உள்ளது. நடுநிலை மேலாளர்கள் மட்டத்தில் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த ஊதிய வேறுபாடு கடந்த 2006ஆம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் 21 விழுக்காடு குறைந்து 48 விழுக்காடு என்ற நிலைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு இது 57 விழுக்காடாக இருந்தது.
தகவல் தொழில் நுட்பம் மற்றும் அயலக அலுவல் பணி (BPO) நிறுவனங்களின் செலவில் முறையே 45, 40 விழுக்காடு ஊதியத்துக்காக செலவிடப்படுகிறது. 2006-08க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பெறும் ஊதிய விகிதத்தில் உள்ள வேறுபாடு கணிசமாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் குறிப்பாக, மென்பொருள் ஏற்றுமதி மூலம் அதிக அளவு வருவாய் மற்றும் லாபத்தை பெற்று வந்த நிறுவனங்கள் இதன் எதிர் விளைவை சந்திக்கும் விதமாக ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் மூலம் தங்களது வருவாய் மற்றும் லாபத்தில் குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டன. இதே நிலை தொடரும் படசத்தில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து லாபத்தில் இயங்க முடியும்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலையால் வேலைக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் பணியில் தடங்கல் எதுவும் ஏற்படாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Thursday, 24 January 2008
குறைந்து வரும் மென்பொருள் வல்லுனர்களின் ஊதிய வேறுபாடு !!
Posted by tksora at 10:50 am
Labels: நாட்டு நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment